×

போளூர் அருகே மீன் வாங்க சென்றபோது பரிதாபம் ஆட்டோ மீது லாரி மோதி சென்னை வாலிபர் உட்பட 2 பேர் பலி: ஒருவர் படுகாயம்

போளூர்:திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(50). இவர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த நண்பர் பிரபாகரன்(48), என்பவரை தனது சொந்த ஊரான மொடையூர் கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தார்.இந்நிலையில் நேற்று காலை மொடையூர் ஏரியில் மீன் வாங்கி வருவதற்காக வெங்கடேசனுக்கு சொந்தமான ஆட்டோவில் பிரபாகரன் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சின்னகுழந்தை(60) ஆகிய 3 பேரும் சென்றனர். ெவங்கடேசன் ஆட்டோவை ஓட்டினார்.அங்கு மீன் கிடைக்காததால் மீண்டும் மொடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலை வளைவில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியும்,ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.போளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னகுழந்ைத சிகிச்சை பலனின்றி பலியானார்.படுகாயம் அடைந்த வெங்கடேசன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவலறிந்த போளூர் சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post போளூர் அருகே மீன் வாங்க சென்றபோது பரிதாபம் ஆட்டோ மீது லாரி மோதி சென்னை வாலிபர் உட்பட 2 பேர் பலி: ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pity Auto ,Polur ,Chennai Vollibur ,Thiruvannamalai district ,Modiyur village ,Venkatesan ,Chennai ,
× RELATED போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால்...