×

பைத்தியம் ஓபிஎஸ்சே: உளுந்தூர்பேட்டையில் போஸ்டரால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் பைத்தியமே ஓபிஎஸ்சே என ஒட்டுப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தொகுதி பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் நேற்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்! நாகரீககோமாளி ஓ.பன்னீர்செல்வம் பைத்தியத்தை கண்டிக்கிறோம்… ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் 2504 பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஓ. பன்னீர்செல்வம் வகித்த அடிப்படை உறுப்பினர் மற்றும் கழக அனைத்து பதவிகளையும் நீக்கயும், கழகமும் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் உறுதி செய்தும் ஓபிஎஸ் கோமாளியே! இரட்டை இலை சின்னம் பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை பைத்தியமே! என்று கூறப்பட்டுள்ளது.

The post பைத்தியம் ஓபிஎஸ்சே: உளுந்தூர்பேட்டையில் போஸ்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Kallakurichi ,Ulundurpettai ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள்...