×

சென்னை பஸ்சில் ரூ.22 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

திருவனந்தபுரம்: குமரி-கேரள எல்லையான பாறசாலை அருகே உள்ள கொற்றாமம் பகுதியில் கலால் துறை அதிகாரிகள் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை-திருவனந்தபுரம் ஆம்னி பஸ்சில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு பயணியிடம் ரூ.22 லட்சம் இருந்தது தெரியவந்தது. அவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த பிரவீன் குமார் (24) என தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை பஸ்சில் ரூ.22 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvananthapuram ,Kottamam ,Parasalai ,Kumari-Kerala ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...