×

தனுஷ்கோடிக்கு இலங்கை அகதிகள் 10 பேர் வருகை

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னார் கடற்கரையில் இருந்து, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு நேற்று முன்தினம் இரவில் 10 பேர் அகதிகளாக கிளம்பி வந்தனர். இரவு முழுவதும் நடுக்கடலில் தவித்த அகதிகள் குறித்து, இப்பகுதி மீனவர்கள், மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மண்டபத்தில் இருந்து ஹோவர்கிராப்ட் கப்பலில் சென்ற இந்திய கடலோர காவல் படையினர், ஒரு குழந்தை, இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேரை மீட்டு அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், இலங்கை முல்லைத்தீவை சேர்ந்த சாருஜன்(23), இவரது மனைவி அம்பிகா(23), ஒரு வயது மகன் மற்றும் சசிகுமார்(43), இவரது மனைவி கலைச்செல்வி (38) இவர்களது 17, 5 வயது மகன்கள் மற்றும் அக்கினேஸ்வர்(75), இவரது மகள் யானுஜா(32), இவரது 9 வயது மகள் என்று தெரிந்தது.

The post தனுஷ்கோடிக்கு இலங்கை அகதிகள் 10 பேர் வருகை appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Rameswaram ,Thalaimannar beach ,
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு