×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடி வசூல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணம் எண்ணும் பணி காவடி மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் நடந்தது. சிவகாசி பதினெண்சித்தர் மடம் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவார பணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவார பணிக்குழு, பொதுமக்கள் பிரதிநிதிகள், அயல்பணி மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ரூ.4 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 505 காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 2 கிலோ 910 கிராம், வெள்ளி 42 கிலோ 750 கிராம், பித்தளை 79 கிலோ, 977 வெளிநாட்டு பணமும் கிடைத்தது.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடி வசூல் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Murugan Temple ,Tiruchendur ,Thiruchendur Subramania Swamy Temple ,Kavadi Mandapam ,Thiruchendur ,Murugan ,Temple ,
× RELATED திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும்...