×

ஆர்.என்.ரவி கவர்னர் பதவிக்கு லாயக்கற்றவர் இந்தியாவில் எந்த கவர்னரும் இதுபோன்ற தவறுகளை செய்ததில்லை: வைகோ பேட்டி

சென்னை: மதிமுக 30ம் ஆண்டு தொடக்க விழா, எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவை தொடர்ந்து, வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கவர்னர் பதவி வகிக்கக் கூடிய ஆர்.என்.ரவி, காவல்துறையில் காலாவதியான மனிதர். அவர் தமிழ்நாட்டில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார். அவர் பேசுவது உளறல் மேல் உளறலாக உள்ளது. அவர் கவர்னர் பதவிக்கு லாயக்கு அற்றவர். கவர்னர் பதவியில் இருப்பதற்கு ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் வேண்டுமானால் பாஜ மற்றும் இந்து அமைப்புகளுக்கு பிரதிநிதியாக இருக்கலாம். இந்தியாவில் இதுவரை எந்த கவர்னரும் இதுபோன்ற தவறுகளை செய்தது கிடையாது.

திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, இதுவரை இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. மதிமுகவின் சொத்து விவரங்கள் முறையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கவர்னர் ராஜ்பவனை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர். அவர் இந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திராவிட மாடல் என்று சொன்னாலே அவருக்கு அச்சமும், நாணமும் ஏற்பட்டிருக்கும். அவர் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறுகிறார்.

The post ஆர்.என்.ரவி கவர்னர் பதவிக்கு லாயக்கற்றவர் இந்தியாவில் எந்த கவர்னரும் இதுபோன்ற தவறுகளை செய்ததில்லை: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : RN ,Ravi ,India ,Vaiko ,CHENNAI ,Madhyamik ,Egmore ,Madhyamik… ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து