×

மேலக்கோட்டையூரில் அதிமுக அரசு தொடங்கிய காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை மூடக்கூடாது: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையை ஒட்டியுள்ள திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூரில் காவலர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ஆங்கில வழியில் நடத்தப்படும் இருபாலர் படிக்கும் பள்ளியாக, 1 முதல் 8ம் வகுப்புவரை முழுமையாக செயல்பட தகுந்த பொது மற்றும் தனியார் கூட்டமைப்புடன், தனியார் பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்படும் பள்ளியாக இப்பள்ளியை நடத்துவதற்கு அதிமுக அரசு ஆணை பிறப்பித்தது. இன்று இந்த பள்ளியை மூடுவதற்கு அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் காவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த 3ம் தேதி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், சோழிங்கநல்லூரில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் இனி மேலக்கோட்டையூரில் காவலர்களின் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட பள்ளி வளாகத்திற்கு மாற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஏற்கனவே உள்ள அரசு நிலத்தில் தனியாக ஒரு கட்டிடத்தை கட்டி மாற்றி இருக்கலாம்.

The post மேலக்கோட்டையூரில் அதிமுக அரசு தொடங்கிய காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை மூடக்கூடாது: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : AIADMK government ,Melakottaiyur ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi ,Tiruporur Union ,Melkottaiyur ,
× RELATED வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல்...