×

சென்னை-யங்கூன் வாராந்திர விமான சேவை தொடக்கம்

சென்னை: மியான்மர் நாட்டில் தமிழர்கள் பெருமளவு வசிக்கின்றனர். இந்நிலையில் விமான சேவை தேவை என தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் தற்போது மியான்மர் நாட்டில் உள்ள யங்கூன்-சென்னை-யங்கூன் இடையே நேரடி விமான சேவையை தொடங்க, மியான்மர் நாட்டின், மியான்மர் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடிவு செய்தது. மியான்மர் ஏர்வேஸ் விமான நிறுவனம், யங்கூன்-சென்னை- யங்கூன் இடையே நேற்று புதிய விமான சேவையை தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இந்த விமானம் இயங்கும். இந்த விமானம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மியான்மர் தலைநகர் ரங்கூன் எனப்படும் யங்கூனில் இருந்து புறப்பட்டு, காலை 10.15 மணிக்கு, சென்னை வந்து சேரும். மீண்டும் காலை 11.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மாலை 3.15 மணிக்கு யங்கூன் நகரை சென்றடையும். நேற்று காலை யங்கூனில் இருந்து, மியான்மர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 38 பயணிகளுடன் புறப்பட்டு, காலை 10.15 மணிக்கு சென்னை வந்தது.

The post சென்னை-யங்கூன் வாராந்திர விமான சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai-Yangon ,Chennai ,Myanmar ,Tamilnadu ,Chennai- ,Dinakaran ,
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்