×

“தோஹா டையமண்ட் லீக்” தொடரில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

டெல்லி: கத்தாரில் நடைபெறும் “தோஹா டையமண்ட் லீக்” தொடரில் ஈட்டி எரிதலில் 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தி தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறார். நீரஜ் சோப்ரா கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளி அசத்தியிருந்தார்.

“தோஹா டையமண்ட் லீக்” தொடரில் நீரஜ் சோப்ரா எறிந்த தொலைவுகள் விவரம்; முதல் முயற்சி: 88.67 மீ, 2வது முயற்சி: 86.04 மீ, 3வது முயற்சி: 85.47மீ, 4வது முயற்சி: தவறுதலான திசையில் எறிந்தார், 5வது முயற்சி: 84.37 மீ, 6வது முயற்சி: 86.52 மீ. 25 வயதாகும் நீரஜ் சோப்ரா 2018ம் ஆண்டு தோஹாவில் முதல் முறையாக பங்கேற்று 4வது இடத்தைப் பிடித்திருந்தார்.

இந்நிலையில் “தோஹா டையமண்ட் லீக்” தொடரில் தங்கப்பதக்கம் வென்ற சோப்ராவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“தோஹா டயமண்ட் லீக்கில் ஜொலித்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள், முன்னோக்கிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என பிரதமர் மோடிதெரிவித்துள்ளார். மேலும் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் பலர் சோப்ராவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

The post “தோஹா டையமண்ட் லீக்” தொடரில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Neeraj Chopra ,Doha Diamond League” ,Delhi ,Doha Diamond League ,Qatar ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...