×

கோடை நெல் சாகுபடி வயல்களில் உழவு பணி

திருவாரூர், மே 6: திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடியினையொட்டி வயல்களில் உழவு பணியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியாக நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவு எனப்படும் செம்மை நெல் சாகுபடி மற்றும் சாதாரண நடவு முறை என சம்பா மற்றும் தாளடி பயிராக 3 லட்சத்து 72 ஆயிரத்து 994 ஏக்கரில் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர். இந்நிலையில் இதற்கு தேவையான உரங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டதுடன் தேவையான ரசாயண உரங்கள் மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் போன்றவையும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் உரிய காலத்தில் கிடைக்க செய்ததன் காரணமாக இந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அறுவடை முடிவுற்று மாவட்டத்தில் ஐந்தரை லட்சம் மெ.டன் அளவில் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக பச்சை பயறு மற்றும் பருத்தி பயிர் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்டத்தில் பச்சை பயறு மற்றும் உளுந்து பயிராக மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 112 ஏக்கரிலும் சாகுபடி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இதனையொட்டி நேரடி நெல் விதைப்பு, செம்மை நெல் சாகுபடி எனப்படும் இயந்திர நடவு மற்றும் சாதாரண நெல் நடவு என மாவட்டத்தில் 21 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணியினை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது விதை நாற்றாங்கால் அமைப்பது மற்றும் டிராக்டர் கொண்டு ஏர் உழுதல் போன்ற பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.

The post கோடை நெல் சாகுபடி வயல்களில் உழவு பணி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...