×

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

 

உடுமலை, மே 6: கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் குடிநீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் குடிமங்கலம் ஒன்றியத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட வி.வேலூர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Dinakaran ,
× RELATED கல்வி நிறுவனங்களில் களைகட்டிய பொங்கல் விழா