×

முத்துகிருஷ்ணாபுரம் -சுப்பராயபுரம் விலக்கு இணைப்பில் குழாய் பதிக்க சாலையோரம் தோண்டிய மணல் குவியலால் வாகன ஓட்டிகள் தவிப்பு

சாத்தான்குளம், மே 6:முத்துகிருஷ்ணாபுரம் – சுப்பராயபுரம் விலக்கு இணைப்பு பகுதியில் குழாய் பதிக்க சாலையோரம் தோண்டிய மணலை மூடாமல் குவியலாக போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். சாத்தான்குளம் அருகே முத்துகிருஷ்ணாபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரமுள்ள சுப்பராயபுரம் விலக்கு இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கடாட்சபுரம், உடன்குடி பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையில் கடந்த 20 நாள்களுக்கு குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது. தற்போது அந்த பணி நிறைவடைந்ததையடுத்து குழாய் பதிக்க தோண்டிய மணலை சாலையோரம் குவியலாக போட்டு சென்றுள்ளனர். மேலும் மணல் குவியலுக்கு அருகில் சாலையோரம் பள்ளமும் தோண்டப்பட்டுள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் எதிரே வரும் லாரி உள்ளிட்ட பெரிய வாகனத்துக்கு வழி விடுகையில் மணல் குவியலால் தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இந்த மணல் குவியலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தில் இந்த சாலையை கடந்து சென்று வருகின்றனர். ஆதலால் நெடுஞ்சாலைத்துறையினர் இதனை பார்வையிட்டு மணல் குவியலால் பெரும் விபத்து நிகழும் முன் அதனை சீரமைத்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post முத்துகிருஷ்ணாபுரம் -சுப்பராயபுரம் விலக்கு இணைப்பில் குழாய் பதிக்க சாலையோரம் தோண்டிய மணல் குவியலால் வாகன ஓட்டிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Muthukrishnapuram ,Subparayapuram Expressway ,Chatankulam ,Subparayapuram ,
× RELATED வெள்ளப்பட்டியில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது