- Poonthamalli
- புதுக்கோட்டை லெண்டையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: வெகுசன பக்தர்களின் தரிசனம்
- குமன்சாவதி
- கும்பாபிஷேகம்
- கும்பாபிஷேகம் கோயில்
- கும்பாபிஷேக விழா
- புதுக்கோட்டைக்கேட்டை அய்யனார் கோயில்
- நோக்கு
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் பிரசித்தி பெற்ற மிக பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் பிரசித்தி பெற்ற பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 1ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 2ம் நாள் யாகசாலை பூஜையில் திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, எந்திர பூஜைகள் நடைபெற்றன. 3ம் நாள் பூஜையில் லட்சுமி சஹஸ்ரநாம பாராயணம், மந்திர வேள்வி பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும், 4ம் நாளான நேற்று சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, கணபதி பூஜை என 4 கால பூஜைகளும் நடைபெற்றன.
நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது அங்கு குழுமியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் பூந்தமல்லி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து எல்லையம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை எல்லையம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாவும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான பூவை எம்.ஞானம், நிர்மலா ஞானம் குடும்பத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
The post பூந்தமல்லி அருகே ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.