- 108 பால்குடா ஊர்வலம்
- திம்மராஜம்பேட்டை கங்கையம்மன் கோயில்
- வாலாஜாபாத்
- 108 பால்குடாம்கள்
- கங்கையம்மன் கோயில்
- திம்மராஜம்பேட்டை
- வாலாஜாஹாபாத்...
வாலாஜாபாத்: திம்மராஜாம்பேட்டை கங்கையம்மன் கோயிலில் 108 பால்குடம் அபிஷேக விழாவில், ஏராளமான பெண்கள் பங்கேற்று பல்குடம் எடுத்து சென்றனர். வாலாஜாபாத் அடுத்த திம்மராஜாபேட்டை கங்கையம்மன் கோயில் 2ம் ஆண்டு 108 பால்குடம் அபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக, பெண்கள் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ கல்யாண கோட்டி வரதர் கோயிலில் இருந்து 108 பால் குடங்களுடன் புறப்பட்ட பெண்கள், காஞ்சிபுரம் சாலை வழியாக ஸ்ரீ கங்கையம்மன் கோயிலுக்கு வந்தடைந்தனர்.
இதனைதொடர்ந்து, அம்மனுக்கு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கற்பூர தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து, 108 பால்குடங்களை அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியினை திம்மராஜாபேட்டை கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
The post திம்மராஜாம்பேட்டை கங்கையம்மன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.