×

காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச்செயல் வெடிகுண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலி

ரஜோரி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியானார்கள். காஷ்மீரில் கடந்த மாதம் 20ம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த தக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் காஷ்மீரின் ரஜோரி அருகே கண்டி வன பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற நேற்று காலையில் இரண்டு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு மேஜர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.காயமடைந்த ராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘‘ தீவிரவாதிகளை பிடிக்கும் பணிக்காக அருகில் உள்ள இடங்களில் இருந்து ராணுவத்தினர் அங்கு விரைந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ரஜோரி மாவட்டத்தில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

The post காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச்செயல் வெடிகுண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Kashmir Rajouri ,Jammu ,Kashmir ,Dinakaran ,
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...