×

குப்பை கொட்டும் விவகாரத்தில் முன்பகை ம.பி.யில் 3 பெண்கள் உள்பட 6 பேர் சுட்டு கொலை

மொரேனா: மத்தியபிரதேசத்தின் மொரோனா மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மெரோனா மாவட்டம் லெபா கிராமத்தில் கஜேந்திர சிங் தோமர் மற்றும் தீர் சிங் தோமர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 2013ம் ஆண்டு காலியான இடத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக சண்டை மூண்டுள்ளது. இந்த சண்டையில் தீர் சிங் தோமர் குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக கஜேந்திர சிங் தோமர் குடும்பத்தினர் லெபா கிராமத்தை விட்டு வௌியேறினர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மூலமாக இரு குடும்பத்தினரும் சமரசம் செய்து கொண்டனர். இந்நிலையில் கஜேந்திர சிங் தோமர் குடும்பம் லெபா கிராமத்துக்கு திரும்பியது. இந்நிலையில், நேற்று காலை இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், இரு தரப்பினரும் தடிகளால் தாக்கி கொண்டனர். தொடர்ந்து தீர் சிங் குடும்பத்தினர் கஜேந்திர சிங் குடும்பத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் கஜேந்திர சிங் தோமரின் 2 மகன்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post குப்பை கொட்டும் விவகாரத்தில் முன்பகை ம.பி.யில் 3 பெண்கள் உள்பட 6 பேர் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Munpaigai ,Morena ,Morona ,Madhya Pradesh ,M.P. ,Dinakaran ,
× RELATED இந்திரா காந்தியின் சொத்துக்களை...