×

சூடானில் சிக்கித்தவித்த 3,584 இந்தியர்கள் இதுவரை மீட்பு

மும்பை: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து வேலைக்காக சென்ற இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தின் கீழ், அவர்கள் கப்பல், விமானங்கள் மூலம் பேட்ஜ் பேட்ஜாக அழைத்து வரப்படுகின்றனர். மும்பை, அகமதாபாத், சென்னை, கொச்சி,பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களின் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் அவர்கள், வெளியுறவு அமைச்சகங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்ட பதிவில், ‘சூடானில் உள்ள இந்தியத் தூதரகம் அளித்துள்ள புள்ளி விபரங்களின்படி, ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் இதுவரை 3,584 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட ஒன்பது நாட்களில், 5 இந்திய கடற்படைக் கப்பல்கள் மற்றும் 16 இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post சூடானில் சிக்கித்தவித்த 3,584 இந்தியர்கள் இதுவரை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,Sudan ,Mumbai ,Operation Kaveri ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.