×

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Research Centre ,Chennai ,Krishnagiri ,Thirupathur ,Thurumapuri ,Meteorological Centre ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...