×

செர்பியாவில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி… 2வது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு!!

பெல்கிரேட் :செர்பியா நாட்டில் அதிகாலை வேளையில் காரில் வந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.ஒரு வாரத்திற்கு உள்ளாக அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச் சூடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேட் அருகே துபோனா என்றால் சிற்றூரில் நகரும் காரில் இருந்தவாறு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இயந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் பொது மக்கள் 8 பேர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு போராடி வரும் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உள்ளூர் செய்தி தொலைக்காட்சிகளின் தகவலின்படி மர்ம நபர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பது தெரியவந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இதுவறை பிடிபடாத நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட துபோனா பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தி வரும் போலீசார், ஹெலிகாப்டர், டிரோன்கள், கார்களில் தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகின்றனர்.கடந்த புதன் கிழமை அன்று 15 வயது சிறுவன் பெல்கிரேட் நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 சக மாணவர்கள் மற்றும் பாதுகாவலர் உயிரிழந்தார். துப்பாக்கி பயன்படுத்துவது தொடர்பான விதிகள் கடுமையாக உள்ள செர்பியாவில் ஒரு வாரத்திற்குள்ளாக அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் அதிர்ச்சி நிலவுகிறது.

The post செர்பியாவில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி… 2வது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : serbia ,Belgrade ,
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!