- சரத் பவார்
- என்சிபி
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- தேசியவாத காங்கிரஸ்
- ஜனாதிபதி
- தின மலர்
சென்னை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சரத்பவார் ராஜினாமா செய்வதை தொடர்ந்து அவர் அதை திரும்ப பெறவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 1999ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் தொடங்கப்பட்டது முதல் 24 ஆண்டுகள் வரை கட்சியினுடைய தலைவராக செயல்பட்டு வந்தவர் சரத்பவார்.
இந்த சூழ்நிலையில் சில சிக்கல்கள் காரணமாக தற்போது ராஜினாமா முடிவை அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. புதிதாக ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து தேர்தலை சந்திக்கும் போது ஒரு பின்னடைவாக பார்க்கப்படும். ஆகவே தேசியவாத காங்கிரசினுடைய தலைவராக சரத்பவாரே நீடிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில், இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களில் ஒருவரான சரத்பவார், 2024 நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பதவி விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நேரத்தில் ராஜினாமா போன்ற முடிவை எடுத்திருக்கவேண்டாம் என்ற கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டிருக்கக்கூடிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதனை வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.