×

மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகரை தரிசனம் செய்ய வந்த நபர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவை பார்க்க வந்த நபர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரை பகுதியில் வந்துள்ளனர். இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரை தரிசனம் செய்வதற்காக வந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தார்.

பக்தர்கள் கூட்டத்தில் சிக்கிய அந்த நபர் ஆழ்வார்புரம் தடுப்பணையில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அருகேயுள்ள காவல்துறைக்கு அளித்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தடுப்பணையில் மூழ்கி இறந்த நபரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இளைஞர் ஒருவர் இறந்தது குறித்து மதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகரை தரிசனம் செய்ய வந்த நபர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Chitrai Festival ,Kallazhaga ,Madurai ,Madurai Kallazhagar Chitrai ,Kallazhagar ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...