×

பெரியஅளவிலான நிழற்குடை அரங்கம்

 

தேனி, மே, 5: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லையாற்றங்கரை அருகே பெரியஅளவிலான நிழற்குடை அரங்கம் அமைக்க வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதாசசி தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதனையடுத்து, தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் சார்பில் 150 அடி நீளம், 20 அடி அகலத்தில் நிழற்குடை அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தேனி எல்.எஸ்.மில் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் தலைமை வகித்தார். வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி முன்னிலை வகித்தார்.

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் உறவின்முறை செயலாளர் கமலக்கண்ணன் வரவேற்று பேசினார். இவ்விழாவில் கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார். தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை உறவின்முறை தலைவர் மாரீஸ்வரன் நன்றி கூறினார். இவ்விழாவில் வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார், திமுக பிரமுகர் சசி, வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் சிதம்பரம், தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை உறவின்முறை செயற்குழு உறுப்பினர்கள், வீரபாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மேலாளர் சாந்தி, மருத்துவமனை மக்கள் தொடர்பு மேலாளர் சலீம், ஷேக்பரித், கார்த்தி ஆகியோர் செய்தனர்.

The post பெரியஅளவிலான நிழற்குடை அரங்கம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Weerabandi ,Mullaithadankar ,Veerabandi ,Dinakaran ,
× RELATED வீரபாண்டி தடுப்பணையில் குளித்து மகிழ...