×

அரிசி கடைக்காரரை தாக்கி பணம் பறிப்பு

திருச்சி, மே 5: திருச்சி அரியமங்கலத்தில் அரிசிக்கடைக்காரரை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஈசாக் (31). இவர் அப்துல்கலாம் ஆசாத் தெருவில் அரிசி மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று நான்கு பேர் கடைக்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அவரை தாக்கி, அரிசி மூட்டையில் தள்ளிவிட்டு கையில் இருந்த பணப்பையை பறித்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து முகமது ஈசாக் அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அரிசி கடைக்காரரை தாக்கி பணம் பறித்த அரியமங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்த ரமேஷ்(29), அரியமங்கலம் ரயில் நகரைச் சேர்ந்த பிரபாகரன்(30) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ரஹ்மான் மற்றும் விஜய் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post அரிசி கடைக்காரரை தாக்கி பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ariyamangalam, Trichy ,Dinakaran ,
× RELATED பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட...