×

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திருவாடானை, மே 5: திருவாடானை அருகே ஆக்களுர் கிராமத்தில் வழிவிடும் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி 3ம் தேதி கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி பூஜை மற்றும் முதல் கால யாக பூஜை ஆரம்பமானது. அன்று இரவு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால, நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது.

வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை யாகத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றினர். அதனையடுத்து மூலவருக்கு கலசத்தில் இருந்த புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது பக்கத்து கிராமத்தினர் பலர் கோவிலுக்கு சீர் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆக்களூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Vinayakar ,Temple ,Kumbaphishekam ,Tiruvadanai ,Maha Kumbabishekha ,Pharvara ,Akulur ,Tiruvadan ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்