×

தூத்துக்குடி 4வது ரயில்வே கேட் 8ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்

தூத்துக்குடி, மே 5: தூத்துக்குடி 4வது ரயில்வே கேட் வரும் 8ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை-தூத்துக்குடி இடையே 158 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை வழி ரயில் தடத்தில் மீளவிட்டான் – தூத்துக்குடி இடையே ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிகட்டமாக மீளவிட்டான் முதல் தூத்துக்குடி வரை 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் அருகே மாற்றப்படுகிறது. இந்தப் பணியும் விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாதை பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்த பாதையில் வரும் 10ம் தேதி பெங்களூருவில் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையகம் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை ரயில்வே கட்டுமான பிரிவு மேற்கொண்டு வருகிறது. இதற்காக நேற்று (4ம் தேதி) இரவு 10 மணி முதல் 8ம் தேதி காலை 6 மணி வரை 4வது ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post தூத்துக்குடி 4வது ரயில்வே கேட் 8ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi 4th Railway Gate ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி முறப்பநாடு விஏஒ லூர்து...