×

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி

வேப்பூர், மே 5: வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் இளவரசன்(25). இவர் அடரியில் இருந்து பொயனப்பாடி கிராமத்துக்கு செல்லும் வழியில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 10.20 மணியளவில் தனது வாட்டர் சர்வீஸ் நிலையத்தில், வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Vepur ,Prince ,Pachamuthu ,Adari ,Adarie ,
× RELATED நவாப்கள், நிஜாம்களுக்கு எதிராக ராகுல் பேசாதது ஏன்? பிரதமர் மோடி தாக்கு