×

மதுராந்தகம் அருகே பரபரப்பு: சாலையோர குளத்தில் தலைகீழாக கவிழ்ந்த வேன்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க வேனை, டிரைவர் திருப்பியபோது, சாலையோர குளத்தில் வேன் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக அச்சிறுப்பாக்கம் சென்று கொண்டிருந்த வேன் அய்யனார்கோயில் ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றது.

அப்போது, குறுக்கே வந்த, இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வலது புறம் திருப்பினார். இதில், சாலையில் திரும்பியபோது வேனில் இருந்த டிரைவர் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து வேனிலேயே விழுந்ததால் வேன் கட்டுப்பாட்டை இழந்து அய்யனார் கோயில் குளத்தில் தலைக்குப்புறக் கவிந்தது. குளத்தில் தண்ணீர் இல்லாததால் வேனில் பயணம் செய்த 4 பேரும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post மதுராந்தகம் அருகே பரபரப்பு: சாலையோர குளத்தில் தலைகீழாக கவிழ்ந்த வேன் appeared first on Dinakaran.

Tags : Stirring ,Madurandakam ,Madhya ,Stir ,Dinakaran ,
× RELATED மத்திய சென்னை பாஜ வேட்பாளர் வினோஜ்...