×

சரத்பவார் பதவி விலகல் தேசியவாத காங்கிரஸ் புதிய தலைவர் யார்? கட்சிக்குழு இன்று ஆலோசனை

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்ட குழு, இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது என, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.  தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்தார். இதை ஏற்க மறுத்து தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்களிடம் சரத்பவார் கூறியதாவது: நான் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். இருப்பினும் கட்சியின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளேன். இன்னும் ஓரிரு நாளில் நான் இறுதி முடிவை அறிவிப்பேன். இவ்வாறு சரத்பவார் கூறினார். இதற்கிடையே, சரத்பவார் பரிந்துரைத்தபடி, மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், சகன் புஜ்பால் மற்றும் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, அண்ணன் மகன் அஜித்பவார் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய குழு, புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து இன்று தெற்கு மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில், காலை 11 மணிக்கு கூடி ஆலோசனை நடத்த உள்ளது. சரத்பவார் தனது முடிவில் இருந்து பின்வாங்காத பட்சத்தில் அவரது மகள் சுப்ரியா சுலே புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

The post சரத்பவார் பதவி விலகல் தேசியவாத காங்கிரஸ் புதிய தலைவர் யார்? கட்சிக்குழு இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress ,Saratparwar ,Mumbai ,Nationalist Congress Party ,Saratbhawar ,Dinakaran ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...