×

தி.மலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது; ரூ.15 லட்சம் பறிமுதல்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். தி.மலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ரூ. 15 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 12ம் தேதி தொடர்ந்து 4 ஏடிஎம்களில் ரூ.72.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு ரூ.20 லட்சம் ரொக்கம், 3 கார்கள், 1 கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஏடிஎம் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.

இந்நிலையில், 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஆசிப் ஜாவேத் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானா – ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஆரவல்லி மலைப்பகுதியில் பல சவால்களுக்கிடையே ஆசிப் கைது செய்யப்பட்டார். பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியிருந்த ஆசிப்-ஐ துப்பாக்கி முனையில் தமிழக போலீசார் கைது செய்தனர். கைதான ஆசீப்பிடம் இருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி ஆசிப்பை பிடித்த தனிப்படைக்கு டிஜிபி சைலேந்திரபாபு ரூ. 1 லட்சம் வெகுமதி வழங்கினார்.

The post தி.மலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது; ரூ.15 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Dt. Mountain A. ,MM ,Thiruvannamalai ,Thiruvannamalai A. TD ,Dt. Mountain district ,. Mountain A. TD MM ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் 8.31 மிமீ சராசரி மழை பதிவு