×

சென்னை அருகே பயங்கரம்!: ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!!

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே மணமை பகுதியில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மணமை என்ற பகுதியில் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தானது, எதிர்திசையில் கல்பாக்கம் வழியாக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல சுக்குநூறாக நொறுங்கியது. ஆட்டோவில் பயணித்த 2 பெண்கள், சிறுமி, சிறுவன், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை அருகே பயங்கரம்!: ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Govt ,Chengalpattu ,Madam ,Mamallapuram ,Brinkalputtu ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!