×

புழல் மத்திய சிறையில் உடல்நல குறைவால் 2 கைதிகள் சாவு

புழல்: புழல் மத்திய சிறையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 2 கைதிகள், நேற்றிரவு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள விசாரணை பிரிவில் சென்னை கோட்டூர், சூர்யா நகர் மேற்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் (82) என்பவரை மயிலாப்பூர் போலீசார் போக்சோ பிரிவின்கீழ் கைது செய்து, கடந்த டிசம்பர் மாதம் புழல் சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களாக மூளைக்கட்டி நோயால் மாணிக்கம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக கடந்த ஏப்ரல் 23ம் தேதி மாணிக்கத்தை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மாணிக்கம் உயிரிழந்தார்.

இதேபோல் கடலூர் மாவட்டம், பண்ருட்டி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (40). இவரை பண்ருட்டி போலீசார் போக்சோ பிரிவின்கீழ் கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்லீரல் பிரச்னைக்கு, சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஏப்ரல் 14ம் தேதி புழல் சிறைக்கு ராஜீவ்காந்தி மாற்றப்பட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ராஜீவ்காந்தி பரிதாபமாக பலியானார்.

மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். உடல்நலக் குறைவால் 2 கைதிகள் சிகிச்சை பலனின்றி ஒரே நாள் இரவில் இறந்து போனது புழல் சிறையில் இருக்கும் பிற கைதிகளிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

The post புழல் மத்திய சிறையில் உடல்நல குறைவால் 2 கைதிகள் சாவு appeared first on Dinakaran.

Tags : central prison ,Krat Central Jail ,Stanley Government Hospital ,Chennai ,Central Prison Health ,Dinakaran ,
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்