×

திருக்குறுங்குடி பேரூராட்சி ஊழியர் மாயம்

களக்காடு,மே 4: திருக்குறுங்குடியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் இசக்கிமுத்து (33). திருக்குறுங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 28ம் தேதி தனது உறவினர் சுப்பிரமணியனுக்கு மின் மோட்டார் வாங்க சுப்பிரமணியனிடம் இருந்து ரூ.3,700, ஏடிஎம் கார்டு பெற்றுக் கொண்டு நெல்லை செல்வதாக கூறி சென்றவர் மாயமானார்.

குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி ரேவதி இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், மாயமான இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.

The post திருக்குறுங்குடி பேரூராட்சி ஊழியர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Thirukkurungudi ,mayam ,Kalakadu ,Ishakhimuthu ,Muthupandi ,Tirukurungudi ,Tirukurungudi Municipality ,Thirukurungudi Municipality ,
× RELATED களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள்