×

வேதாரண்யத்தில் ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா

வேதாரண்யம், மே4: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முப்பெரும் விழா நீர்முளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.மே தின விழா, நிறுவனர் பிறந்தநாள் விழா, பணி நிறைவு செய்த, ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. வட்டார தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார்.வட்டார செயலாளர் நெடுமாறன் வரவேற்றார். மாநில கூடுதல் தலைவர் திருமுருகன், மாவட்ட செயலாளர் அமிர்தலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகோபாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநில தலைவர் லட்சுமிபதி வாழ்த்துரை வழங்கினார். வட்டார பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.விழாவில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post வேதாரண்யத்தில் ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Teacher ,Alliance Triennial Celebration ,Vedaranyam ,Tamil Nadu Primary School Teachers Alliance ,Neemulai Panchayat Union ,Teacher Alliance Triennial Celebration ,
× RELATED தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல்