×

திட்டக்குடியில் தொடர் மழை வைத்தியநாத சாமி கோயில் வளாகத்தை சூழ்ந்த நீர்

 

திட்டக்குடி, மே 4: திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் திட்டக்குடியில் உள்ள வைத்தியநாத சாமி கோயிலில் மழைநீர் சூழ்ந்தது. நேற்று பிரதோஷம் என்பதால் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. பக்தர்கள் வெளியில் செல்ல முடியாமல் கோயிலுக்குள் சென்றனர்.

தொடர்ந்து பெய்த மழைநீர் கோயில் வளாகம் முழுவதும் முழங்கால் அளவு சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் தண்ணீரில் நீந்தியவாறு சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறுகையில், மழை அதிகளவு பெய்ததால் கோயில் வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளது. தண்ணீர் வெளியேற வேண்டும் என்றால் குறைந்தது 3 அல்லது 5 மணி நேரம் ஆகும். இதனால் மிகுந்த சிரமமாக உள்ளது என கூறினார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோயில் வளாகங்களில் மழைநீர் தேங்காதவாறு தண்ணீரை வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திட்டக்குடியில் தொடர் மழை வைத்தியநாத சாமி கோயில் வளாகத்தை சூழ்ந்த நீர் appeared first on Dinakaran.

Tags : Thitakkudi ,Vaidyanatha Sami temple complex ,Dinakaran ,
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!