×

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி

 

அலங்காநல்லூர், மே 4: அலங்காநல்லூர் அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்சேரி முத்தாலம்மன் சுவாமி கோவில் ஜல்லிக்கட்டு காளை வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானது. இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சக்குடி உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று யாரிடமும் பிடிபடாமல் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி நாணயம், போன்ற பல்வேறு பரிசுகளும் பொருட்களும் பரிசாக பெற்றுள்ளது. நேற்று உயிரிழந்த காளைக்கு சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் வருகை தந்து மாலை, வேட்டி,துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு ஒட்டு மொத்த கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க காளையை ஊர்வலமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்தனர்.

The post அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Alankanallur ,Madurai district ,Dinakaran ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை