×

மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா

 

வத்தலக்குண்டு, மே 4: வத்தலக்குண்டு நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா நடந்தது. வத்தலக்குண்டு நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா வரும் 23ம் தேதி தொடங்குகிறது. திருவிழாவையொட்டி நேற்று கம்பம் நடும் விழா நடந்தது. சிறப்பு பூஜைகள் நடந்தன. கம்பம் நடும் நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை தக்கார் சீனிவாசன், நிர்வாக அதிகாரி கனகலட்சுமி, கோயில் திருப்பணி குழு தலைவர் அன்பு, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Mariamman temple ,Vatthalakundu ,Muthu Mariamman temple ,Vattalakundu ,Vattalakundu… ,Mariyamman temple ,planting ,
× RELATED கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயிலில் தேர் பவனி கோலாகலம்