×

நாட்டின் உள்ளேயும்,வெளியேயும் இந்தியாவின் மதிப்பை களங்கப்படுத்த கூடாது

திப்ருகார்: இந்தியாவின் மதிப்பை யாரும் களங்கப்படுத்த அனுமதிக்க முடியாது என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். அசாம் மாநிலம் திப்ருகார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் மக்கள் தங்கள் உரிமைகளை அனுபவிக்கவில்லை என்று தவறான கதையைப் பரப்புவதன் மூலம் நாட்டிற்கு வெளியே இந்தியாவின் ஜனநாயகப் புகழைக் கெடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்.

நம்பிக்கையுடனும், முரண்பாடுகளுக்குப் பயப்படாமலும், இன்றைய நாளில் இந்தியா மிகவும் துடிப்பான ஜனநாயகத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதை நான் தைரியமாகச் சொல்வேன். மாணவர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் நாட்டின் தூதர்களாக செயல்பட வேண்டும். தேசியவாதத்தை நம்ப வேண்டும். நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும், நமது வளர்ச்சிப் பாதையையும், ஜனநாயக மதிப்புகளையும் களங்கப்படுத்துபவர்களை ஆதரிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post நாட்டின் உள்ளேயும்,வெளியேயும் இந்தியாவின் மதிப்பை களங்கப்படுத்த கூடாது appeared first on Dinakaran.

Tags : India ,Dibrugarh ,Vice President ,Jekadeep Dangar ,Assam State ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!