சென்னை: வணிகர் தினத்தை முன்னிட்டு நாளை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பூ, பழம் விற்பனை வழக்கம்போல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் வணிகர் மாநாடு நாளை நடக்க இருப்பதால், வியாபாரிகள் அனைவரும் அங்கு செல்கின்றனர். எனவே அன்றைய தினம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் முழுவதும் அடைக்கப்படும் என காய்கறி மார்க்கெட் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஜி.டி. ராஜசேகர் அறிவித்துள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கக்கூடிய பூ மற்றும் பழம் மார்க்கெட் நாளை வழக்கம்போல் செயல்படும். எனவே நாளை பூக்கள் மற்றும் பழம் விற்பனை அதிகரிக்கக்கூடும். திருச்சி மாநாட்டுக்கு வரும்படி கூட்டமைப்பு தலைவர் ஜி.டி ராஜசேகர் விடுத்த அழைப்புக்கு பூ மற்றும் பழம் வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர்.
The post வணிகர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு நாளை விடுமுறை: பூ, பழம் விற்பனைக்கு தடையில்லை appeared first on Dinakaran.