×

அண்ணாமலையார் கோயில் அருகே பஞ்சு திரி விளக்குகள் ஏற்ற தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே, பஞ்சு திரி கொண்ட விளக்குகள் ஏற்ற தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அதையொட்டி, 365 நாட்கள் பலன் கொண்டது எனத் தெரிவித்து பஞ்சினால் செய்யப்பட்ட, மேற்புறம் நெய் தடவிய, மஞ்சள் நிற உருண்டை வடிவிலான விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு, கோயில் அருகே ஏற்றப்படுகிறது.

இந்த விளக்கில் மெழுகு தன்மை இருப்பதால், எளிதில் அணைவதில்லை. சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. எளிதில் தீ விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. எனவே, இதுபோன்ற பஞ்சு திரி விளக்குகளை அண்ணாமலையார் கோயில் அருகே விற்பனை செய்யவும், ஏற்றவும் தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற விளக்குகளை விற்பகும் கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அந்த விளக்குகளை ஏற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அண்ணாமலையார் கோயில் அருகே பஞ்சு திரி விளக்குகள் ஏற்ற தடை appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar Temple ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...