×

ரஷ்யா – உக்ரைன் போர் நீடிக்கும் நிலையில், ரஷ்ய அதிபரை கொல்ல உக்ரைன் முயற்சிப்பதாக கிரெம்ளின் குற்றசாட்டு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சிப்பதாக அதிபர் மாளிகையான கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது. புதினை கொலை செய்யும் நோக்கத்துடன் ரஷ்ய அதிபர் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிப்பதாக அதிபர் மளிகை கூறியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 கிலோ வெடி பொருட்களுடன் பரந்த ட்ரோன், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது. வெடி பொருட்களுடன் பறந்து வந்த ட்ரோன் ரஷ்ய அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்தவே வந்ததாக தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி என அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடிக்கும் நிலையில் ரஷ்ய அதிபரை உக்ரைன் கொல்ல முயன்றதால் சர்வதேச அரங்கில் பரபரப்பு நிலவுகிறது.

The post ரஷ்யா – உக்ரைன் போர் நீடிக்கும் நிலையில், ரஷ்ய அதிபரை கொல்ல உக்ரைன் முயற்சிப்பதாக கிரெம்ளின் குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : Kremlin ,Ukraine ,Russia ,MOSCOW ,Mint ,Dinakaran ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...