×

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்பு!!

லண்டன் : இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்க உள்ளார்.இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பரில் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததைத் தொடர்ந்து, 74 வயதான அவரது மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து அவரது அதிகாரப்பூர்வமான முடிசூட்டு விழா வரும் மே 6ம் தேதி நடக்க உள்ளது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பாரம்பரிய வழக்கப்படி நடக்கும் விழாவில் இங்கிலாந்து மன்னராக சார்லசும், ராணியாக கமிலாவும் முடிசூட உள்ளனர்.

முடிசூட்டு விழாவை இங்கிலாந்து மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த முடி சூட்டு விழாவில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்கசியாக கடந்த 1953ம் ஆண்டு ராணி 2ம் எலிசபெத் முடிசூடிய பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு அரச குடும்பத்தில் நடக்கும் ள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பினை ஏற்று இந்திய அரசு சார்பில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் இங்கிலாந்து நாட்டுக்கு மே 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்க உள்ளார்.

The post இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்பு!! appeared first on Dinakaran.

Tags : Vice President ,Jagadeep Thankar ,King Charles III ,England ,London ,Jagdeep Thankar ,Dinakaran ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!