×

108 ஆம்புலன்ஸில் பணியாற்ற 22 பேர் தேர்வு

 

நாமக்கல்: நாமக்கல்லில், 108 ஆம்புலன்ஸில் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 பேர் கலந்து கொண்டனர்.

முகாமில் சேலம் மண்டல மேலாளர் குமரன், நாமக்கல் மாவட்ட மேலாளர் அம்பிகேசன் ஆகியோர் கலந்து கொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்தனர். மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

The post 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற 22 பேர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...