×

பெரியகுளம் பகுதியில் இடி, மின்னலுடன் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை

 

பெரியகுளம், மே 3: வெப்ப சலனம் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கோடை வெயில் பகல் நேரத்தில் சுட்டெரித்து வந்தது. அந்த தாக்கம் இரவு நேரத்திலும் தொடர்ந்தது. இந்நிலையில் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகல் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இதனை தொடர்ந்து பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளார், எ.புதுப்பட்டி, வடுகபட்டி, லட்சுமிபுரம், ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையானது 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல ஆர்ப்பரித்து சென்றது. மேலும் கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்க கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருவதால் முற்றிலுமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பெரியகுளம் பகுதியில் இடி, மின்னலுடன் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Theni district ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால்...