×

அப்பிபாளையம் அமராவதி ஆற்றில் காரின் உட்புறம் பிணமாக கிடந்த நபர் மீட்பு

 

கரூர்: கரூர் மாவட்டம் அப்பிபாளையம் அமராவதி ஆற்றில் காரின் உட்புறம் பிணமாக கிடந்த நபரை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அடுத்துள்ள அப்பிபாளையம் அமராவதி ஆற்றில் காரின் பின் சீட்டில் ஒருவர் இறந்து கிடப்பதாக தாந்தோணிமலை போலீசார்களுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு கரூர் மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த ராஜூ(54) என்பதும், குடிபழக்கம் உள்ள இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து, தனியாக வசித்து வந்துள்ளார் எனவும், நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வந்த ராஜூ, பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், அமராவதி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், காரில் இருந்து இரண்டு ஆப் பாட்டில் மற்றும் ஒரு குவார்ட்டர் பாட்டில் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், அதிக போதையில் காரை ஓட்டிக் கொண்டு அமராவதி ஆற்றின் உட்புறம் இறங்கி, பின்னர் காரை செலுத்த முடியாமல் போதையில் இறந்திருக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அப்பிபாளையம் அமராவதி ஆற்றில் காரின் உட்புறம் பிணமாக கிடந்த நபர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Amaravati River ,Appipalayam ,Karur ,Karur District Appipalayam Police ,Amaravathi river ,Dinakaran ,
× RELATED சித்திரை திருவிழாவை முன்னிட்டு...