×

ஒன்றிய அரசை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, மே 3: ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு அருகே ஒன்றிய அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு குழுவின் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். தபால் ஊழியர்கள் சங்க கோட்ட செயலாளர்கள் வெள்ளியங்கிரி, சத்தருக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அஞ்சல் ஊழியர்களின் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு தொழிற்சங்க அங்கீகாரத்தை ரத்து செய்த ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், கோட்ட பொருளாளர் தனசேகரன், மாநில துணை தலைவர் குப்புசாமி, கோட்ட தலைவர் சுப்பிரமணியன், பிஎஸ்என்எல் ஊழியர்கள் மாவட்ட செயலாளர் பாலு, ரயில்வே டிஆர்இயு உதவி பொதுசெயலாளர் பிஜு, சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி உட்பட உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : union government ,Erode ,Erode Surambatti Nal Road ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...