×

அம்பத்தூர், திரு.வி.க.நகர் உள்பட 5 பேருந்து நிலையங்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை:சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24 நிதியாண்டின் அறிவிப்புகளில் ஒன்றான மாநகர பேருந்து நிலையங்களை தலா ரூ.5 கோடியில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையங்களாக மேம்படுத்துவது தொடர்பாக, 5 சென்னை மாநகர பேருந்து நிலையங்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில், பேரவையில் 2023-24 நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.

இதில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், 6 மாநகர பேருந்து நிலையங்களை தரம் உயர்த்துவது தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம், பெரியார் நகர் பேருந்து நிலையம், திரு.வி.க.நகர் பேருந்து நிலையம், முல்லை நகர் பேருந்து நிலையம் மற்றும் கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 மாநகர பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல், இயக்கப்படுகின்ற பேருந்துகள் முறையாகவும், சீராகவும் செல்வதற்கான வழிவகை செய்வது, பணிமனையில் நிர்வாக அலுவலகம் அமைப்பது, பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான ஓய்வறைகளை மேம்படுத்துவது, பேருந்து நிலையத்திற்கு வரும் பயனாளிக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது, நவீன கழிப்பிட வசதிகளை உருவாக்குவது போன்ற பல்வேறு பணிகளுக்காக ஒவ்வொரு பேருந்து நிலையங்களுக்கு தலா ரூ. 5 கோடியில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையமாக மேம்படுத்துவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார். இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, எம்எல்ஏக்கள் (அம்பத்தூர்) ஜோசப் சாமுவேல், (பெரம்பூர்) சேகர், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம், பெருநகர சென்னை மாநகராட்சி நகரமைப்புக் குழுத் தலைவர் இளைய அருணா உடன் இருந்தனர்.

The post அம்பத்தூர், திரு.வி.க.நகர் உள்பட 5 பேருந்து நிலையங்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ambathur ,CV ,G.K. ,Minister ,SegarBabu ,Nagar ,Chennai ,Chennai Metropolitan Development Group ,Dinakaran ,
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...