×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்

பெரியபாளையம்: சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் பொன்னேரி வட்ட கிளை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பைக் ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதற்கு பொன்னேரி வட்டக்கிளை செயலாளர் சித்ரா சுரேந்தர் தலைமை வகித்தார். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு பைக் ஓட்டிகள் 20 பேருக்கு இலவசமாக தலைக் கவசத்தை அணிவித்தார். அப்போது தலைக்கவசம் அணிந்துவந்த வாகன ஓட்டிகளுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். ஆய்வாளர் வெங்கடேசன் பேசுகையில், இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் அதிகமான உயிரிழப்புகள், தலைக்கவசம் அணியாமல் செல்வதால்தான் ஏற்படுகிறது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசிய அவர், இருசக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்’ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர், தியாகராஜன், தனிப்பிரிவு முதல்நிலை காவலர் குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொன்னேரி வட்ட கிளை துணைத் தலைவர் சுரேந்தர் நன்றி கூறினார்.

The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Thiruvallur District Periyapalyam ,
× RELATED பெரியபாளையம் அருகே மூடிய...