×

பெட்டிக்கடையில் ரூ.10,000 மதிப்புள்ள சிகரெட்டுகள் திருட்டு

திருப்போரூர்: கேளம்பாக்கத்தை அடுத்த வாணியன்சாவடி ஜெஜெ நகரை சேர்ந்தவர் அப்துல்லா (39). அதே பகுதியில் டீ மற்றும் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அப்துல்லா, நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த சிகரெட்டுகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருந்தன.

இதனால், அதிர்ச்சியடைந்த அப்துல்லா, கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 3 பேர் பைக்கில் வந்து திருடிச்செல்வது தெரியவந்தது. அதன்அடிப்படையில், அவர் இது குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிளாட்ஸன் ஜோஸ், வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

The post பெட்டிக்கடையில் ரூ.10,000 மதிப்புள்ள சிகரெட்டுகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thirupporur ,Abdullah ,Vaneanzavadi Jej ,Kelambakkam ,Dinakaran ,
× RELATED காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக போட்டியிடாதது ஏன்?: உமர் அப்துல்லா கேள்வி