×

பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 4,5-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 4,5-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். வேலூரிலிருந்துஇரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இதேபோல் திருவண்ணாமலையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் 5.35 மணிக்கு வேலூர் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 4,5-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvanamalai ,4,5 ,Belarnami Grivalam ,Chennai ,Thiruvannamalai ,Belarnami Krivalam ,Southern Railways ,Vellore ,Thiruvanamalayan ,Railway ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே...