×

சட்டீஸ்கர் பாஜ மூத்த தலைவர் காங்கிரசில் இணைந்தார்

ராய்பூர்: சட்டீஸ்கரில் பாஜவிலிருந்து விலகிய மூத்த பழங்குடியின தலைவர் நந்த் குமார் சாய் நேற்று காங்கிரசில் இணைந்தார். சட்டீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு எதிர்க்கட்சியாக உள்ள பாஜவில் இருந்த மூத்த பழங்குடியின தலைவர் நந்த் குமார் சாய்(77) நேற்று முன்தினம் பாஜவின் முதன்மை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக சத்தீஸ்கர் மாநில பாஜ தலைவர் அருண் சாவோவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று சட்டீஸ்கரில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான ராஜீவ் பவனில் முதல்வர் பூபேஷ் பாகல், மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்க்கம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்த நந்த் குமார் சாய், சட்டீஸ்கர் மற்றும் ஒருங்கிணைந்த மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜ மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சட்டீஸ்கர் பாஜ மூத்த தலைவர் காங்கிரசில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : president ,chattieskar baja ,congress ,Raipur ,Nand Kumar Sai ,Baja ,Sattisgarh ,Sattiskar ,Senior President ,Dinakaran ,
× RELATED சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து பதவி...